வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு
தொடர்மொழிக்கு ஒரு மொழிபற்றி அறிந்து கொள்வதற்காக இந்த இணைப்பில் அழுத்தவும்.
வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு
தொடர்மொழிக்கு ஒரு மொழிபற்றி அறிந்து கொள்வதற்காக இந்த இணைப்பில் அழுத்தவும்.
வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார்.
"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன் வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.
"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.
Word: Compassion
Meaning (தமிழில்): இரக்கம்
Example: Show compassion to the poor.
உதாரணம்: ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.
| ஆண்டு | விழா பெயர் |
|---|---|
| முதல் ஆண்டு | காகித விழா |
| இரண்டாம் ஆண்டு | பருத்தி விழா |
| மூன்றாம் ஆண்டு | தோல் விழா |
| நான்காம் ஆண்டு | மலர், பழ விழா |
| ஐந்தாம் ஆண்டு | மர விழா |
| ஆறாம் ஆண்டு | சர்க்கரை, கற்கண்டு விழா |
| ஏழாம் ஆண்டு | கம்பளி, செம்பு விழா |
| எட்டாம் ஆண்டு | வெண்கல விழா |
| ஒன்பதாம் ஆண்டு | மண்கலச விழா |
| பத்தாம் ஆண்டு | தகரம், அலுமினியம் விழா |
| பதினோறாம் ஆண்டு | இரும்பு விழா |
| பன்னிரண்டாம் ஆண்டு | லினன் விழா |
| பதிமூன்றாம் ஆண்டு | மின்னல் விழா |
| பதினான்காம் ஆண்டு | தந்த விழா |
| பதினைந்தாம் ஆண்டு | படிக விழா |
இங்கு தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, மற்றும் தமிழரின் உலகளாவிய விஷயங்களைத் தொடுவதற்கான அறிவுப் புதிர்கள் தொகுக்கப்படுகின்றன. தினமும் புதுப்பிக்கப்படும்!
தொடர்ந்து புதுப்பிக்கப்படும்... மேலும் பகுதியுடன் விரைவில் சந்திப்போம்!
- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்!
தாய்மொழி மரபு | ஆங்கிலம் உலகத்தோடு இணைப்பு – இரண்டுக்கும் இடம் வேண்டும்!
இன்றைய உலகில் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. தொழில், அறிவியல், மருத்துவம், கணினி போன்ற அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மிகுந்தது. அதனால், ஆங்கிலம் கற்றல் என்பது காலத்தால் விதிக்கப்படும் அவசியம். ஆனால், இதன் பொருட்டு தாய்மொழியாம் தமிழை புறக்கணிப்பது என்பது தாய்ப்பாலை மறப்பதற்குச் சமமான பிழை என்பதை உணர்வது அவசியகும்.
சில சர்வதேச பாடசாலைகள் அல்லது பிரபல தனியார் பாடசாலைகளில், தமிழ்மொழி பேசும் மாணவர்களுக்கு கூட தண்டனை வழங்கப்படுவது கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். “Speak in English only” என்ற அறிவிப்புகள், மாணவர்களின் தாய்மொழிப் பாவனைக்கு தடையாகவே அமைகின்றன.
1. குறைநிரப்பு பிரேரணை (Supplementary Budget) என்பது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும் போது அல்லது புதிய செலவினங்கள் தேவைப்படும்போது, அவற்றை ஈடுசெய்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஆகும்.
2. மிகை ஊதியம் என்பது ஒரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட அதிகமாக வழங்கப்படும் தொகை அல்லது சலுகையைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் காரணமாக வழங்கப்படும். உதாரணமாக, ஒரு மேலதிக வேலை நேரம் அல்லது சிறப்பு செயல்திறனுக்காக வழங்கப்படும் ஊதியம் மிகை ஊதியமாகக் கருதப்படலாம்.
✍️ கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)
பரீட்சை என்பது கல்வியறிவு மட்டுமல்ல; அது மனநிலை, உற்சாகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் அனைத்தோடும் இணைந்தது. நேரம். மாணவ–மாணவிகள் கடுமையாக உழைக்கும் பருவம் இது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் நல்வாழ்க்கைக்கான ஆசையின் பேரில் குழந்தைகளின் மன அழுத்தத்தை தெரியாமலே அதிகரித்து விடுகிறார்கள்.
Thamilsh Shudar இனால் இன்றிலிருந்து கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 7 வகுப்பிற்கான தமிழ்மொழி | மேல் மாகாணம் | 2018 வௌியிடப்பட்டுள்ளது.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
– தமிழ்ச்சுடருக்காக ✍️ கலைமகன் பைரூஸ்
கவிதை என்பது சுருங்கி ஒளிரும் உணர்வு. அந்த சுருக்கத்திலே – ஒரு பருவம், ஒரு துளி, ஒரு வாசனை, ஒரு மனநிலை – பிரமாதமாக வெளிப்படலாம். இத்தகையக் கவிதை வடிவம்தான் ஹைக்கூ.
Haiku (俳句) என்பது ஜப்பானிய குறுங்கவிதை வடிவமாகும். இது குறுகியதாயினும், அதில் உள்ள உணர்ச்சி மிகுந்த ஆழம் யாரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
'தெற்கில் உதித்த சூரியன்'
மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.
20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு